தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 98 பேருக்கு பாதிப்பு

By

Published : May 31, 2022, 10:28 PM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்காக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா  பாதிப்பு
கரோனா பாதிப்பு

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர், கேரளாவில் இருந்து வந்த ஒருவர் உள்பட 98 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு சதவீதம் வேகமாக அதிகரித்து வருகிறது. கேளம்பாக்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் இதுவரை 118 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று மே 31ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 340 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர், கேரளாவில் இருந்து வந்த ஒருவர் உள்பட 98 பேருக்கு புதியதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து 6 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரத்து 17 பேருக்கு பரிசோதனை செய்ததில், 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதுள்ளது. கரோனா தொற்று பாதித்தவர்களில் தற்போது 542 பேர் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

விஐடியில் 118 பேருக்கு பாதிப்பு:கடந்த 24 நேரத்தில் 49 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தது வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 907 என உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அந்தப் பகுதி தொற்று பாதிக்கப்பட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டில் 46 பேருக்கும், சென்னையில் 44 பேருக்கும், கோயம்புத்தூர், திருவள்ளூரில் தலா 2 பேருக்கும், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 98 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில் 3.5 சதவீதம் என தொற்று பாதிப்பு பதிவாகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details