தமிழ்நாடு

tamil nadu

வட கிழக்கு பருவ மழை எப்படி இருக்கும் - வெதர் மேன் விளக்கம்

By

Published : Oct 29, 2020, 5:42 PM IST

Updated : Oct 29, 2020, 8:43 PM IST

சென்னை: வட கிழக்கு பருவ மழை என்றாலே இரவு முதல் அதிகாலை வரை பெய்யும் தன்மை கொண்டது எனவும் இடைவெளி விட்டே மழை இருக்கும் எனவும் தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.

north east monsoon
Tamil Nadu Weatherman

வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒருநாள் ஆகியுள்ள நிலையில் இன்று (அக். 29) அதிகாலை 3 மணி முதல் காலை 11 மணிவரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்ததுள்ளது.

சென்னையில் பெய்த மழையளவு

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தமிழ்நாடு வெதர் மேன் என அழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார், அப்போது பேசிய அவர், மழையின் தாக்கம் போக போக குறையும், சிறிய இடைவெளி விட்டு பெரிய மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்த வருடம் தென் மற்றும் வட தமிழ்நாட்டில் மழையின் அளவு பொறுத்தவரை சராசரியை விட அதிகமாக இருக்க கூடும் என்பதே தற்போதைய கணிப்பு என தெரிவித்தார்.

வட கிழக்கு பருவ மழை எப்படி இருக்கும் - வெதர் மேன் விளக்கம்

எல்லா மழையையும் நாம் 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையுடன் ஒப்பிடக் கூடாது. இன்று பெய்தது கன மழைதான் சாலைகள் தண்ணீர் தேக்கம் சில மணி நேரங்களில் சரியாகி விடும். வருகின்ற நவம்பர் மாதத்தில் நல்ல மழை எதிர்பார்க்கின்றோம், ஆனால் 2015ஆம் ஆண்டு பெய்த மழை அப்படி அல்ல, அப்போது ஆறுகள் நிரம்பி வழிந்தது.

வட கிழக்கு பருவ மழை என்றாலே இரவு முதல் அதிகாலைவரை பெய்யும் தன்மை கொண்டது. காற்றழுத்த தாழ்வு எதேனும் அருகில் இருந்தால் நாள் முழுவதும் மழை பெய்யக்கூடும்.

இரண்டு, மூன்று நாட்கள் மழை இருக்கும், பிறகு இடைவெளி விட்டு மீண்டும் மழை இருப்பது வட கிழக்கு பருவ மழையின் இயல்பான நிலை என தெரிவித்த அவர்.

சென்னையை தவிர்த்து தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. வட கிழக்கு மழையின் ஜாம்பவான் என்று சொல்லக்கூடிய நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய பகுதிகளில் இன்னும் நல்ல மழை பெய்யவில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழுக்கு நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட் கார்டு!

Last Updated : Oct 29, 2020, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details