தமிழ்நாடு

tamil nadu

ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

By

Published : Oct 14, 2021, 2:06 PM IST

மழை  கனமழை  தமிழ்நாட்டில் மழை  மழை நிலவரம்  தமிழ்நாட்டில் மழை நிலவரம்  வானிலை அறிக்கை  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்  மீனவர்களுக்கான எச்சரிக்கை  rain  heavy rain  tamil nadu rain update  rain update  weather report  Chennai Meteorological Center  Meteorological Center  climate  today climate
புயல் ()

வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளதால், மூன்று நாள்களுக்குத் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 14) திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேலும் வட, தென் மாவட்டங்கள், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை

தமிழ்நாட்டில் மழை

அக்டோபர் 15: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும்; ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்; ஏனைய மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 16:நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும்; ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்; ஏனைய மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த மூன்று நாள்களுக்கு மழை

அக்டோபர் 17, 18: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை

அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

உத்திரமேரூர், வெம்பாக்கம், காட்டுமன்னார்கோயில் தலா 8 செ.மீ., சீர்காழி 7 செ.மீ., மணல்மேடு 6 செ.மீ., பெனுகொண்டாபுரம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் தலா 5 செ.மீ., தாமரைப்பக்கம், பூண்டி, செந்துறை, மைலாடி தலா 4 செ.மீ., விழுப்புரம், காரைக்கால், ஊத்தங்கரை, கொள்ளிடம், ஸ்ரீபெரும்புதூர், பேச்சிப்பாறை, மயிலாடுதுறை, எடப்பாடி, மதுராந்தகம், அரக்கோணம், ஜெயம்கொண்டாம் தலா 3 செ.மீ., நாகப்பட்டினம், குழித்துறை, காஞ்சிபுரம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, சின்னக்கல்லார், திருக்கோயிலூர், பூதப்பாண்டி தலா 2 செ.மீ., காவேரிப்பாக்கம், வால்பாறை, கொட்டாரம்), திருத்தணி, நாகர்கோயில், வாணியம்பாடி, காட்பாடி, தென்காசி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வட மேற்குத் திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மீனவர்கள் கவனத்திற்கு

மத்திய கிழக்கு, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

வங்கக்கடல்:அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதையடுத்து அக்டோபர் 15ஆம் தேதி அன்று அந்தமான், அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகள், ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் அக்டோபர் 16ஆம் தேதி அன்று மத்திய வங்கக் கடல், வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

0இதனைத் தொடர்ந்து அக்டோபர் 17, 18 தேதிகளில் மத்திய வங்கக் கடல், வடக்கு வங்கக் கடல் பகுதிகள், மேற்கு வங்கம், வங்கதேசம், ஒடிசா கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

புயல் எச்சரிக்கை

அரபிக்கடல்:இன்று (அக்டோபர் 14) தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதையடுத்து அக்டோபர் 15ஆம் தேதி அன்று தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் மேற்கூறிய இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்

ABOUT THE AUTHOR

...view details