தமிழ்நாடு

tamil nadu

அரும்பாக்கத்தில் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

By

Published : Aug 14, 2022, 5:34 PM IST

சென்னை அரும்பாக்கத்தில் வங்கி கொள்ளை நடந்த அதே பகுதியில் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி மேலாளர் வீட்டில் நகை பணம் திருட்டு
வங்கி மேலாளர் வீட்டில் நகை பணம் திருட்டு

சென்னை: அரும்பாக்கம் பிரசாத் கார்டன் பகுதியில் ஃபெட் பேங்க் கோல்ட் வங்கியில் ரூ.20 கோடி மதிப்புடைய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நான்கு தனிப்படைகளை அமைத்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள வங்கி உதவி மேலாளர் ஒருவர் வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் வங்கியில் உதவி மேலாளராகப்பணியாற்றி வருபவர் விஜயராஜன். இவர் அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று (ஆக.13) குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு பின்பு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள்ளே சென்றுபார்த்தார். அப்போது, பீரோவில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், மடிக்கணினி உள்ளிட்டப்பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இது தொடர்பாக விஜயராஜ் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து கொள்ளைச்சம்பவங்கள் அரங்கேறி உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:அரும்பாக்கம் கொள்ளை சம்பவம்... ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த வங்கி ஊழியரின் நண்பர் கைது

ABOUT THE AUTHOR

...view details