தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி! திடீர் நெஞ்சுவலி எனத் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 8:03 AM IST

Minister Senthil Balaji : புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Senthil Balaji
Senthil Balaji

சென்னை :அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணமோசடி, சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்த வழக்குகளில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவகுமாரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன் அவர் காணொளிக் காட்சி மூலம் புழல் சிறையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரின் நீதிமன்றக் காவல் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (அக். 9) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தகவல் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு

ABOUT THE AUTHOR

...view details