தமிழ்நாடு

tamil nadu

"முதலில் கைதி- 2.. அப்புறம் தான் ரோலக்ஸ்... - லோகேஷ் கனகராஜ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 10:31 PM IST

Japan Movie Event: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி 2ஆம் பாகம் தான் முதலில் வரும் என்றும் ரோலக்ஸ் அதன் பின்னரே எனவும் தெரிவித்தார்.

கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா
கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா

சென்னை:இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. ஜப்பான் திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாகும். இப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர் பிரபு படத்தை தயாரிக்க, ஜீ.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக். 28) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ராஜு முருகன், கே.எஸ்.ரவிக்குமார், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சுசீந்திரன், முத்தையா, சிறுத்தை சிவா, சத்யராஜ், தமன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேடையில் பேசுகையில், "கைதி படப்பிடிப்பின் போது யாரும் தூங்கவில்லை. இரவு படப்பிடிப்பு தான். அதை பற்றி கூற வேண்டும் என்றால் ஆக்சன் காட்சிகள் தான் அதிகம் எடுத்தோம். சினிமாவைத் தாண்டி கவுண்டமணி பற்றி அதிகமாக பேசுவார் கார்த்தி. அவ்வளவு சீரியஸாக படம் எடுக்கும் போது காமெடி செய்வார்.

கைதி படத்தில் பிரியாணி சாப்பிடும் காட்சியில், முதலில் அந்த இடத்தில் தண்ணீர் குடிக்கும் காட்சி தான் இருந்தது‌. யோசித்து செய்தது தான் பிரியாணி சாப்பிடுவது. அதற்கு படக் குழுவுக்கு நன்றி. முதலில் கைதி 2ஆம் பாகம் படம் வரும். அதன் பிறகு தான் ரோலக்ஸ் வரும். "Dilli Will Return Soon" என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா பேசுகையில், "கார்த்திக்கு இது 25வது படம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிறுத்தை படம் எனக்கு கிரெடிட் மாதிரி. என் பேருடன் வந்துவிட்டது. கார்த்தி ரொம்ப நல்ல மனிதர், நேர்மையான மனிதர்‌. படத்துக்கு உண்மையாக இருப்பார். தமிழில் எனக்கு முதல் படம் கொடுத்தார்.

என்னை ஆத்மார்த்தமாக நம்பி, எனக்கு அந்த படத்தை கொடுத்தார். அப்படத்தில் இரண்டு கதாபாத்திரமும் வேறுபட்டது. இரண்டு விதமான கேரக்டரும் அநாயாசமாக செய்தார்" என்று கூறினார்.

இதையும் படிங்க:நவம்பர் 1ல் லியோ வெற்றி விழா? நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திட்டம்? அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் போலீசில் மனு?

ABOUT THE AUTHOR

...view details