தமிழ்நாடு

tamil nadu

8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இந்திய விமானப்படை விமானம்; சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 6:04 PM IST

2016 Indian Airforce Flight Missing: 2016 ஜூலை 22 அன்று வங்காள விரிகுடாவில் ஓ.பி பணியின் போது காணாமல் போன இந்திய விமானப் படையின் ஏ.என்-32 விமானம் (பதிவு கே-2743) கடைசியாகத் தென்பட்ட இடத்தில் ஆழ்கடலில் சுமார் 310 கி.மீ தொலைவில் கடல் படுகையில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

indian-air-force-plane-that-disappeared-8-years-ago-discovery-of-damaged-parts
8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இந்திய விமானப்படை விமானம்; சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?

சென்னை: இந்திய விமானப் படையின் ஏ.என்-32 விமானம் (பதிவு கே-2743) 2016 ஜூலை 22 அன்று வங்காள விரிகுடாவில் ஓ.பி பணியின் போது காணாமல் போனது. இந்த விமானத்தில், 29 பணியாளர்கள் இருந்தனர். விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்றாலும் காணாமல் போன பணியாளர்களையோ அல்லது விமான பாகங்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், சமீபத்தில் காணாமல் போன ஏ.என்-32 கடைசியாகத் தென்பட்ட இடம் என அறியப்பட்ட இடத்தில் ஆழ்கடல் ஆய்வு திறன் கொண்ட ஒரு தன்னாட்சி வாகனம் (ஏ.யு.வி) நீருக்கு அடியில் நிறுத்தப்பட்டது. மல்டி பீம் சோனார் (சவுண்ட் நேவிகேஷன் மற்றும் ரேங்கிங்) உட்படப் பல பேலோட்களைப் பயன்படுத்தி 3400 மீட்டர் ஆழத்தில் செயற்கை துளை சோனார் மற்றும் உயர் தெளிவுத்திறன் புகைப்படம் எடுத்தல் முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேடல் படங்களைப் பகுப்பாய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 140 கடல் மைல் (சுமார் 310 கி.மீ) தொலைவில் கடல் படுகையில் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்தது.

தேடுதலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்ததில் ஏ.என்-32 ரக விமானத்துடன் அவை ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் கிடைத்த இந்த ஆய்வு புகைப்படம், அதே பகுதியில் காணாமல் போன வேறு எந்த விமானத்தின் பதிவுகளையும் கொண்டிருக்கவில்லை. எனவே, இந்தச் சிதைந்த பகுதிகள் விபத்துக்குள்ளான ஐ.ஏ.எஃப் ஏஎன் -32க்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க:இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் இன்று திறப்பு.. சிறப்புகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details