தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு காவல்துறை மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம் - திருமாவளவன்

By

Published : Sep 30, 2022, 7:12 PM IST

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, விசிக உள்ளிட்ட 25 கட்சிகளின் மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் செயல் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழ்நாடு காவல்துறை மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம் - திருமாவளவன்
தமிழ்நாடு காவல்துறை மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம் - திருமாவளவன்

சென்னை:அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆந்திர மாநிலம் குண்டூரில் மண்டல கமிஷன் தலைவராக இருந்த பி.பி.மண்டலுக்கு அங்கு உள்ள ஓ.பி.சி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலை வைத்துள்ளனர். இந்த சிலையை நிறுவும் முன்பே அதை ஆந்திர அரசு தகர்த்து உள்ளது. இது அவருக்கு செய்து இருக்கிற அவமதிப்பு, இதை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

அதே இடத்தில் அந்த சிலை வைக்கவும் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் அவருக்கு சிலை வைக்க வேண்டும். அகில இந்திய அளவில் அவரது பங்களிப்பு மகத்தானது. தேவைப்பட்டால் ஆந்திர விசிக சார்பில் குண்டூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து இருப்பது சரியானது.

அரசின் காரணங்களும் ஏற்புடையது. தடை விதித்து இருக்கின்ற காரணத்தை விசிக ஏற்கிறது. அதே நேரத்தில் விசிகவின் சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 25 கட்சிகள் மனித சங்கிலி பேரணியில் பங்கேற்பதாக கூறியிருந்த நிலையில் இதற்கு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

விடுதலை சிறுத்தைகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றல்ல. ஆர்எஸ்எஸ் போன்று மதவாத வெறுப்பு அரசியலை பேசும் அமைப்பு நாங்கள் இல்லை. மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம். அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாட்டில் பேரணி நடத்துவதில் உள் நோக்கம் உள்ளது. போட்டிக்கு நாங்கள் பேரணி நடத்துவதாக பாஜக சொல்வதை ஏற்கிறேன். காந்தியை படுகொலை செய்தவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள் என்பது உலகறிந்த உண்மை.

அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து 27 ஆண்டுகள் ஆகிறது. இப்போது அம்பேத்கருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்பது அம்பேத்கரை இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதாகும். இந்துத்துவத்தை வீழ்த்தாமல் சமத்துவம் மலராது என முழங்கியவர் அம்பேத்கர். அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்று பாஜக சொல்வது அப்பட்டமான ஏமாற்று வேலை.

தமிழ்நாடு காவல்துறை மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம் - திருமாவளவன்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த சொல்லப்படும் மூன்று காரணங்களும் முற்றிலும் பொருந்தாத காரணங்கள். ஆர்எஸ்எஸ் மீது குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இந்தியா முழுவதும் உள்ளதன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல ஆர்எஸ்எஸூம் அதன் ஆதரவு அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும்.

துப்பாக்கிகளோடு திரியும் கும்பல் அவர்கள். ஆர்எஸ்எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்யாமல், இந்தியா போன்ற நாட்டில் பரந்துபட்ட மக்களுக்கு தொண்டாற்றும் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்தது உள்நோக்கம் உள்ளதாக பார்க்கிறோம். பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கொடுத்தது போல கூலை கும்பிடு போட்டு அனுமதி கொடுக்கும் அரசு தமிழ்நாட்டில் இல்லை. இங்கு நடப்பது பெரியார், அண்ணா, கருணாநிதி அரசு. பிற மாநிலங்களில் செய்த சேட்டையை தமிழ்நாட்டில் செய்யலாம் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பார்த்தால் வால் ஒட்ட நறுக்கப்படும்" என்றார்

இதையும் படிங்க: வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஓபிஎஸ் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details