தமிழ்நாடு

tamil nadu

சென்னை அனகாபுத்தூரில் தீ விபத்து - மின் கசிவால் பற்றி எரிந்த வீடு

By

Published : Dec 16, 2020, 4:44 PM IST

சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின் கசிவு காரணமாக இன்று (டிசம்பர் 16) திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மின் கசிவால் பற்றி எரிந்த வீடு
மின் கசிவால் பற்றி எரிந்த வீடு

சென்னை:சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் விநாயக நகர் 13ஆவது தெருவில் வசித்து வருபவர் டேவிட்(59). இவர் அதே பகுதியில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடையை முழுவதுமாக காலி செய்துவிட்டு பொருள்கள் அனைத்தையும் அவரது வீட்டின் மாடியிலுள்ள அறை ஒன்றில் வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 16) அந்த அறையில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதியினர் டேவிட்டிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் மேலே சென்று பார்க்கையில் தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சென்னை அனகாபுத்தூரில் தீ விபத்து

இந்த விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சங்கர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:மீன் வளர்ச்சி கழக குடோனில் தீ விபத்து - ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

ABOUT THE AUTHOR

...view details