தமிழ்நாடு

tamil nadu

ஹெராயின் விற்பனை- மேற்கு வங்க நபர் சென்னையில் கைது

By

Published : Aug 6, 2021, 1:06 PM IST

கபீர்
கபீர்

பம்மல் பகுதியில் தொடர்ந்து ஹெராயின் விற்பனை செய்துவந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பம்மல் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக சங்கர் நகர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்களைக் காவல் துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர், காவல் துறையினரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனே அவரை விடாமல் விரட்டி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால், அவருடைய உடைமைகளைச் சோதனை செய்தனர்.

அவரிடம் 3 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஹெராயின் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை செய்ததில், அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த கபீர் (28) என்பதும், கோவூரில் தங்கி சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் சில நாள்களாக 50 லட்சம் ரூபாய்வரை ஹெரோயின் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் கபீர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பெட்ரோல் போட பணம் கொடுக்காததால் கணவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details