தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை: மழைநீரால் சூழப்பட்ட ரிப்பன் மாளிகை

By

Published : Aug 21, 2021, 3:08 PM IST

சென்னை: இன்று காலை பெய்த கனமழை காரணமாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழை நீரால் சூழந்துள்ள ரிப்பன் மாளிகை
மழை நீரால் சூழந்துள்ள ரிப்பன் மாளிகை

சென்னையில் இன்று (ஆக.21) காலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய சென்னை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தி- நகர் ஆகிய பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் சென்னை முழுவதும் கனமழை பெய்ததால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து மழைநீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து பாதைகள் மாற்றப்பட்டு போக்குவத்துக் காவலர்கள் சாலைகளைக் கண்காணித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சி வளாகமான ரிப்பன் மாளிகையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

மழைநீரால் சூழப்பட்டுள்ள ரிப்பன் மாளிகை

மேலும், அங்குள்ள கால்வாயில் ஏற்ட்ட அடைப்பு காரணமாகவும்,மாளிகை வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.

மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள்

இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது தண்ணீரை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாரம்பரிய ஊஞ்சலில் ஆடி ஓணம் கொண்டாடிய சசி தரூர் எம்பி!

ABOUT THE AUTHOR

...view details