தமிழ்நாடு

tamil nadu

சிவசங்கர் பாபா தப்பியோட்டம்? தேடும் பணியை முடுக்கிவிட்ட சிபிசிஐடி

By

Published : Jun 16, 2021, 9:30 AM IST

சென்னை: டேராடூன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சிவசங்கர் பாபாவை காணவில்லை என்பதால் அவர் தப்பியோடிருக்கலாம் என்ற அடிப்படையில் அவரைத் தேடும் பணியை சிபிசிஐடி காவல் துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

சிவசங்கர் பாபா தப்பியோட்டம்
சிவசங்கர் பாபா தப்பியோட்டம்

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.

இதையடுத்து, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த 13ஆம் தேதி காவல் துறைத் தலைவர் திரிபாதி உத்தவிட்டார்.

மாணவிகள் மூலம் பெறப்பட்ட மூன்று புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு உள்ளிட்ட மூன்று தனித்தனி வழக்குகளை மூன்று தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிவசங்கர் பாபா தப்பியோட்டம்

இந்த நிலையில், சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் தரப்பில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 11ஆம் தேதி ஆஜரான சுசில் ஹரி பள்ளி நிர்வாகி ஜனனி தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் சிபிசிஐடி தனிப்படையொன்று டேராடூனுக்கு நேற்று விரைந்தது. மற்ற இரு குழுக்கள் சுசில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்றும், புகார் அளித்த மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றும், சிவசங்கர் பாபாவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்களைத் திரட்டும் பணியிலும் ஈடுபட்டுவருகின்றன.

சிவசங்கர் பாபா தப்பியோட்டம்

ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க அவருக்கு நேற்றைய தினமே லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் டேராடூனுக்குச் சென்ற தனிப்படையினர் மூலம் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

அவர் தப்பியோடி இருக்கலாம் என்ற அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர் அவரைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், சிவசங்கர் பாபா நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா தப்பியோட்டம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தப்பியோடியிருக்கலாம் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details