தமிழ்நாடு

tamil nadu

பி.இ, பி.டெக் படிப்புக்கு நாளை முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு

By

Published : Sep 26, 2021, 7:30 PM IST

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை (செப்.27) முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரையில் நான்கு கட்டங்களாக ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

சென்னை:பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டது.

1 லட்சத்து 74 ஆயிரத்து 490 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்து, 1 லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து தகுதியான 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இவர்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வு அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு

கலந்தாய்விற்கான பணம் செலுத்துவதற்கு இரண்டு நாட்களும், கல்லூரிகளை தேர்வு செய்ய இரண்டு நாட்களும், தற்காலிக ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய இரண்டு நாளும், இறுதி ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய ஒரு நாளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

4 கட்ட கலந்தாய்வு

தரவரிசைப்பட்டியிலில் எண் 1 முதல் 14,788 வரை உள்ளவர்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 வரையில் முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு

தரவரிசைப்பட்டியிலில் எண் 14,789 முதல் 45,227 வரை உள்ளவர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரையில் இரண்டாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

எண் 45,228 முதல் 86,228 வரை உள்ளவர்களுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரையில் மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

எண் 86,229 முதல் 1,36,973 வரை உள்ளவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரையில் நான்காவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதேபோல் தொழிற்கல்விப் பிரிவில் சேரவுள்ள மாணவர்கான கலந்தாய்வும் நாளை முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மூலம் 6 ஆயிரத்து 442 இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: வெறிச்சோடிய திரையரங்குகள் - காரணம் கதைப் பஞ்சமா? கரோனா அச்சமா?

ABOUT THE AUTHOR

...view details