தமிழ்நாடு

tamil nadu

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

By

Published : Aug 16, 2022, 9:01 AM IST

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட 5வது நபர் கைது
அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட 5வது நபர் கைது

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியின் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் கடந்த 13ஆம் தேதி மர்ம கும்பல் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்தும், ஊழியர்களை கட்டிபோட்டு கத்தியைக் காட்டி மிரட்டியும் 32 கிலோ நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகையில் 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தங்கத்தை மீட்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் ஏற்கனவே முருகன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சூர்யா என்பவரை தற்போது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details