டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், டேக்வாண்டோ மகளிர் கே44-49 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை அருணா தன்வர், பெரு நாட்டு வீரர் லியோனர் எஸ்பினோசா கரன்சா உடன் மோதினார்.
ரெபிசாஜ் ஆட்டம்
இப்போட்டியில், அருணா தன்வர் 21-84 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தார். இதையடுத்து, வெண்கலப் பதக்கப் போட்டிக்குத் தகுதிபெற வாய்ப்பளிக்கும், காலிறுதி ரெபிசாஜ் ஆட்டத்தில் (REPECHAGE) பங்கேற்கவிருந்தார். இந்நிலையில், காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.