தமிழ்நாடு

tamil nadu

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு டெல்லியில் பாராட்டு விழா

By

Published : Aug 9, 2021, 2:20 PM IST

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் இன்று மாலை பாராட்டு விழா நடத்துகிறது.

Sports Authority of India
Sports Authority of India

டோக்கியோ ஒலிம்பிக் நேற்று நிறைவடைந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் டெல்லியில் இன்று (ஆக. 9) தேதி பாராட்டு விழா நடத்துகிறது.

நிறைவு விழா முடிந்த பின் பல வீரர்கள் இன்றுதான் நாடு திரும்புகின்றனர். அவர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் மாலை 6.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறும் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

நீரஜ் சோப்ரா, மீரா பாய் சானு, ரவி குமார் தஹியா, பி.வி. சிந்து, பஜ்ரங் புனியா, லவ்லினா ஆகிய ஆறு பேரும், இந்திய ஆடவர் ஹாக்கி அணி என மொத்தம் ஏழு பதக்கங்களை இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக் - பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள்

ABOUT THE AUTHOR

...view details