2019ஆம் ஆண்டிற்கான மகளிர் உலகக்கோப்பைக் கைப்பந்துத் தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடந்த ஆறாவது லீக் சுற்றில் தென்கொரிய அணி அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய தென்கொரியா 15-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் செட்டை கைப்பற்றியது. அதன்பின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் காட்டிய அர்ஜென்டினா அணி இரண்டாவது செட் கணக்கை 25-21 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி தென் கொரியாவிற்கு அதிர்ச்சியளித்தது.
அதன்பின்னர் தனது வெறித்தனமான ஆட்டத்தை காண்பித்த தென்கொரிய அணி மூன்றாவது, நான்காவது செட்கணக்குகளை 25-19, 25-09 என்ற புள்ளிக்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.