தமிழ்நாடு

tamil nadu

#FIVBWorldCup: அர்ஜென்டினாவை வீழ்த்தியது தென் கொரியா!

By

Published : Sep 22, 2019, 12:13 PM IST

டொயமா: மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ஆறாவது லீக் போட்டியில் தென் கொரிய அணி அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

#FIVBWorldCup

2019ஆம் ஆண்டிற்கான மகளிர் உலகக்கோப்பைக் கைப்பந்துத் தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடந்த ஆறாவது லீக் சுற்றில் தென்கொரிய அணி அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய தென்கொரியா 15-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் செட்டை கைப்பற்றியது. அதன்பின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் காட்டிய அர்ஜென்டினா அணி இரண்டாவது செட் கணக்கை 25-21 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி தென் கொரியாவிற்கு அதிர்ச்சியளித்தது.

அதன்பின்னர் தனது வெறித்தனமான ஆட்டத்தை காண்பித்த தென்கொரிய அணி மூன்றாவது, நான்காவது செட்கணக்குகளை 25-19, 25-09 என்ற புள்ளிக்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து போட்டி ஆறாவது சுற்றில் தென்கொரிய அணி 3:1 என்ற அடிப்படியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைக் கைப்பந்து தொடரில் தென்கொரிய அணி 6 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் சந்தித்து ஒன்பது புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அர்ஜென்டினா அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும் ஆறு தோல்வியையும் தழுவி புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் நீடிக்கின்றது.

இதையும் படிங்க: "ப்ளைட் லேட்...பேக் மிஸ்ஸிங்" - ட்விட்டரில் சோகத்தை வெளிப்படுத்திய டூபிளஸ்சிஸ்!

Intro:Body:

FIVB Worldcup Volleyball


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details