சென்னை:செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 29) மதியம் 3 மணியளவில் தொடங்க உள்ளது. 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இத்தொடரில், இந்தியா சார்பாக ஆடவர், மகளிர் பிரிவில் ஏ, பி, சி என மொத்தம் 6 அணிகளில் 30 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனி அடையாள எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன(Lot Number).
இந்நிலையில், தொடரின் முதல் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், இந்திய ஆடவர் 'ஏ' அணி (2696) ஜிம்பாப்வே அணியுடனும் (2208), ஆடவர் 'பி' அணி (2649) ஐக்கிய அரபு அமீரகத்துடனும் (2146), ஆடவர் 'சி' அணி (2619) தெற்கு சூடான் அணியுடனும் (2101) மோத உள்ளன.
மற்றொரு புறம் மகளிர் அணி பிரிவில் இந்திய 'ஏ' அணி (2486) தஜிகிஸ்தான் அணியுடனும் (1775), மகளிர் 'பி' அணி (2351) வேல்ஸ் அணியுடனும் (1673), மகளிர் 'சி' அணி (2318), ஹாங்காங் அணியுடனும் (1623) மோதுகின்றன.