தமிழ்நாடு

tamil nadu

Cricket World Cup 2023: ‘சிறையில் இருந்தவாறே போட்டியை காண அனுமதி வேண்டும்’ - இம்ரான் கான் கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 10:51 PM IST

பாகிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையை வென்று பெற்றுக்கொடுத்த முன்னாள் கேப்டன் இம்ரான் கான், தனது பிறந்தநாள் அன்று நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை தொலைக்காட்சி மூலம் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ஆமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில் ஒரு முரண்பாடான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டி தொடங்கும் அதே நாளில், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது 71ஆவது வயதை எட்டுகிறார். 1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வென்றது. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் பாகிஸ்தான் வென்ற ஒரே உலகக் கோப்பை அது தான். உலகக் கோப்பை போட்டியில் கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியின் ஒரே கேப்டன் இம்ரான் கான் தான்.

இந்நிலையில், தான் சிறை அறைக்குள் இருந்தவாறே உலகக் கோப்பை போட்டியைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும், இம்ரான் கான் இருக்கும் சிறையில் குளியலறை மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லை என்று அவரது குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2018 மற்றும் மார்ச் 2022ஆம் ஆண்டுகளில் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பையடுத்து லாகூரில் உள்ள இல்லத்தில் இருந்த இம்ரான் கானை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தங்களது கிரிக்கெட் பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இம்ரான் கானின் காட்சிகள் அழிக்கப்பட்டன.

1992ஆம் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. இதற்கு கேப்டன் இம்ரான் கான் உறுதியாக இருந்தார். இருந்தபோதிலிம், கோப்பையை பெறும் காட்சிகள் உள்பட இம்ரான் கான் வரும் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு வீடியோ வெளியிட்டனர்.

முன்னதாக 1987 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்குப் பாகிஸ்தான் அணி செல்லத் தவறியதால், இம்ரான் தனது காலணிகளை கழுத்தில் தொங்கவிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இதனை அவர் அறிவிக்கும் வேலையில் அவர் தனது தொழிலில் உச்சத்தில் இருந்தார். இதனைக் கேட்ட அப்போதைய ராணுவ ஆட்சியாளர் தளபதி ஜியா-உல்-ஹக், ஒரு பொதுக் கூட்டத்தில் இம்ரான் கான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார்.

ஜியா-உல்-ஹக் குறைந்த முக்கிய கிரிக்கெட் ஆர்வலரான நவாஸ் ஷெரீப்பை அரசியலில் ஈடுபட அழைத்துச் சென்றார். இந்நிலையில், ஆகஸ்ட் 1988ஆம் ஆண்டு நடந்த ஒரு விமான விபத்தில் ராணுவ ஆட்சியாளர் உயிரிழந்தார். பின்னர், பல ஆண்டுகளுக்குப் பிறகு இம்ரான் கான் அரசியலில் நுழைந்தார். அரசியலில் இம்ரானின் அந்தஸ்து ஒரு சாம்பியன் என்ற பிம்பத்தின் மூலம் கிடுகிடுவென உயர்ந்தது.

அவரது தாயின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியதன் மூலம் அவருக்கு ஆதரவு பெருகியது. கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாக இருந்து அரசியல்வாதிகளாக வந்த இருவருக்கு இடையேயான சண்டை, அவர்களின் நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஆசிய விளையாட்டு போட்டி; ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணி!

ABOUT THE AUTHOR

...view details