தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலையின்போது அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் பல முக்கிய திரைப்பிரபலங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், மீனா உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.