தமிழ்நாடு

tamil nadu

Kerala Actress Rape Case: நடிகர் திலீப் வீடு, அலுவலகங்களில் சோதனை!

By

Published : Jan 13, 2022, 5:01 PM IST

Dileep

நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

எர்ணாக்குளம் (கேரளா) : நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் திலீப் வசிக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் கேரள குற்றப் பிரிவு காவலர்கள் இன்று (ஜன.13) சோதனை நடத்தினார்கள்.

காவல் கண்காணிப்பாளர் மோகன சந்திரன் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையானது திலீப்பின் சகோதரி வீட்டிலும் நடைபெற்றதாக தெரிகிறது.

முன்னதாக போலீசார் நடிகர் திலீப் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்ற அனுமதியை பெற்றனர். இந்நிலையில் இரகசியமாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருள்கள், ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரபல நடிகை ஒருவர் கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர சிலரின் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புதுச்சேரியில் நடிகை நக்மா கைது!

ABOUT THE AUTHOR

...view details