தமிழ்நாடு

tamil nadu

பிக்பாசில் வெடித்தது மோதல் - இமான் அண்ணாச்சி தான் காரணமா?

By

Published : Oct 6, 2021, 1:25 PM IST

BIG BOSS

பிக்பாஸ் 5ஆவது சீசனின் மூன்றாம் நாளான இன்று இமான் அண்ணாச்சியால் சண்டை ஆரம்பம் ஆனது போல் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை :விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாசின் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.3) தொடங்கியது. முதல் நாள் போட்டியாளர்களிடையே டாஸ்க் எதுவும் கொடுக்கப்படவில்லை. இரண்டாம் நாள் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதலாவதாகப் போட்டியாளர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த சோகங்களை அனைவரிடமும் பகிர்ந்து வருகின்றனர்.

வெடித்தது மோதல்

இந்நிலையில், இமான் அண்ணாச்சியால் சண்டை ஆரம்பம் ஆனது போல் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இமான் அண்ணாச்சி பேசியபோது சிலர் கருத்து சொல்ல, ஆண் போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம் வெடித்து அனைவரும் கடுமையாகப் பேசியுள்ளனர்.

இதையும் படிங்க : அதிரடி காட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் வெளியான வித்யுத் ஜாம்வாலின் 'சனக்' ட்ரெய்லர்

ABOUT THE AUTHOR

...view details