கரோனா ஊரடங்கு, திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்ததால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அந்தத் திரைப்படங்களில் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதில் வலிமை திரைப்படமும் ஒன்று.
இதனையடுத்து, கரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில், திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. இதனால், பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.