கரோனா, ஒமைக்ரான் வைரஸ் காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துவருகின்றனர். குறிப்பாக பல மாநிலங்களில் திரையரங்குகள் 50 விழுக்காடு மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால், திரைத் துறை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவரது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பணக்காரனைப் பெரிய பணக்காரனாகவும், ஏழையைப் பிச்சைக்காரனாகவும் மாற்றும்.
எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க:Exclusive: நடிகராக பிடிக்கும்; ஆனால் இது சரியல்ல - சாய்னா நேவால்