சென்னை:ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டு முதல் ஒன்றிணைந்த பிஎஸ்சி படிப்பினை அறிமுகப்படுத்த உள்ளது.
BBSC எனப்படும் இந்த பட்டப்படிப்பு அறிவியல் பாடப் பிரிவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் உயிர் அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள் ஒன்றிணைந்த புதிய பிஎஸ்சி பட்டப் படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி முதல் நான்கு செமஸ்டர்கள் மாணவர்கள் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆகிய பாடங்கள் செய்முறை வகுப்புகளுடன் கற்றுத்தரப்படும். இறுதியாண்டில் உள்ள மீதமிருக்கும் இரண்டு செமஸ்டர் களில் மாணவர்கள் தாங்கள் விரும்பும். ஏதேனும் ஒரு முதன்மை பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.