தமிழ்நாடு

tamil nadu

'கூகுள் நிறுவனத்தில் சாதியப் பாகுபாடா..?' - ராஜினாமா செய்த தனுஜா குப்தா!

By

Published : Jun 5, 2022, 5:22 PM IST

Updated : Jun 5, 2022, 5:39 PM IST

கூகுள் நிறுவனம் சாதிப்பாகுபாட்டை ஆதரிப்பதாக குற்றச்சாட்டி, அதன் நியூஸ் பிரிவு திட்ட மேலாளர் தனுஜா குப்தா பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

dalit-civil-rights-activist-accuse-google-of-a-casteist-and-hostile-workplace-practices
dalit-civil-rights-activist-accuse-google-of-a-casteist-and-hostile-workplace-practices

வாஷிங்டன்: அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தில் "ஈக்வாலிட்டி லேப்(Equality Lab)" என்னும் பட்டியலின உரிமைகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் தேன்மொழி சௌந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கு கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கருந்தரங்கை கூகுள் நியூஸ் பிரிவு திட்ட மேலாளர் தனுஜா குப்தா ஏற்பாடு செய்தார்.

ஆனால், இந்த கருந்தரங்கிற்கு மூத்த அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கூகுள் நிறுவனம் சார்பில் தனுஜா குப்தாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து தனுஜா குப்தா தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை 15,000 ஊழியர்களுக்கு இ-மெயில் செய்தார்.

அதில், "கூகுள் நிறுவனத்தில் நான் பாதுகாப்பாக உணரவில்லை என்பதால் ராஜினாமா செய்கிறேன். இங்கு 11 ஆண்டுகளாகப் பணியாற்றிய எனக்கு ராஜினாமா செய்ய பல காரணங்கள் இருந்தபோதிலும் சாதியப் பாகுபாட்டால் மட்டுமே இதை செய்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக "ஈக்வாலிட்டி லேப்" நிர்வாக இயக்குநர் தேன்மொழி சௌந்தரராஜன் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்தார். இதுகுறித்து தேன்மொழி, "பணியிடத்தில் சாதி, சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் கருத்தரங்கை ரத்து செய்துள்ளது.

இந்த நடவடிக்கை அதன் ஊழியர்களுக்கும் எனக்கும் பெரும் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகள் தொடரக்கூடாது. கூகுள் தனது பணியாளர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாட்டை நீக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கு கூகுள் நிறுவனம் மறுப்புத்தெரிவித்து, ’எங்கள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடுகளுக்கு இடமில்லை.

பணியிடத்தில் பழிவாங்குதல், பாகுபாடு பார்த்தல் உள்ளிட்டவைக்கு எதிராக மிகத் தெளிவான கொள்கையை கொண்டுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சமூக வலைதளங்களில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஒரு தமிழ் பிராமணர் என்றும், அவருக்குத் தெரியாமல் அந்த நிறுவனத்தில் சாதியப் பாகுபாடு நடக்காது என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:இளம்மனைவி குற்றவாளி.. அவதூறு வழக்கில் ஜானிடெப்-க்கு வெற்றி!

Last Updated :Jun 5, 2022, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details