சவூதியில் மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் தலைமையில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக மன்னரின் இளைய சகோதரரும், இளவரசருமான அகமது பின் அப்துல்லாசிஸ், மருமகன் முகமது பின் நயீஃப் என ராஜ குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி உலக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, 84 வயதான மன்னர் சல்மான் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், அதிகாரப் பிடியை இறுக்கிவரும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் மன்னராக உள்ளார் என்றும் பேச்சு எழுந்தது.