அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாணத்தில் உள்ள ஹனோவர் ஹில்ஸ் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் மாணவி, ஷரவ்யா.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் பல்வேறு அரசுத்துறையினருக்கு இலவசமாக பிஸ்கேட் வழங்கி வருகிறார். இதையடுத்து ஷரவ்யாவின் சமூகப் பணியைப் பாராட்டி, வெள்ளை மாளிகையில் விருது வழங்கி, அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.