தமிழ்நாடு

tamil nadu

ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட தொழிலதிபரின் மகன் - அதிர்ச்சி தகவல்

By

Published : Aug 23, 2021, 8:49 PM IST

kangeyam kidnap

காங்கேயம் அருகே பிரபல அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு, ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்டுள்ளார்.

திருப்பூர்: அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு, ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் அருகே கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் பெரிய அரிசி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது. இவரது மகன் சிவ பிரதீப் (25), ஆலை நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் சிவ பிரதீப் நேற்று (ஆகஸ்ட் 22) அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டார். தொடர்ந்து, கடத்தல்காரர்கள் அவரது பெற்றோரிடமிருந்து ரூபாய் 3 கோடி பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அவரது பெற்றோர் காவல்துறைக்கு செல்லாமல் கடத்தல் கும்பலுக்கு 3 கோடி ரூபாய் கொடுத்து, மதுரை அருகே மகனை மீட்டுள்ளனர். பத்திரமாக மீட்ட பின்னர் இது குறித்து காவல்துறையிடம் தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் குமரேசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கடத்தல் குற்றவாளிகள் 10 பேரில் நான்கு பேரை திருப்பூர் மாவட்ட காவல் துறையினர், மதுரை (3 நபர்கள்), கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ஒரு கோடியே 89 லட்சம் ருபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details