தமிழ்நாடு

tamil nadu

ஓடும் பேருந்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: நடத்துநர் கைது

By

Published : Dec 10, 2021, 5:24 PM IST

vilupuram sexual harassment case
vilupuram sexual harassment case ()

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துநர் சிலம்பரசன் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து ஓட்டுநரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து நேற்று இரவு கொத்தமங்கலம் சென்ற நகரப் பேருந்தில் ஆறு பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில், விழுப்புரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த ஐந்து பயணிகள் அனைவரும் பெரும்பாக்கம் என்கிற கிராமத்தில் இறங்கிவிட்டனர்.

அந்தப் பேருந்தில் தனியாக பயணம் செய்த தனக்கு பேருந்தின் நடத்துநர் சிலம்பரசன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 20 வயது இளம்பெண் காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின்பேரில் காணை காவல் துறையினர் சிலம்பரசனைக் (32) கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். மேலும் ஓட்டுநர் அன்புச்செல்வனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் இறங்கிய பின்னர், தனியாக அமர்ந்திருந்த பெண்ணை அவர் இறங்க வேண்டிய இடத்தில் உள்ள நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பேருந்தை நிறுத்தி பெண்ணுக்கு நடத்துநர் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், ஓட்டுநர் இதற்கு உடந்தையாக இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details