தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது

By

Published : Aug 20, 2022, 6:59 PM IST

Etv Bharat
Etv Bharat ()

ஆந்திராலிருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தி வந்த நான்கு பேரை வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

வேலூர்மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கணியம்பாடியில் வேலூர் தாலுகா காவல்துறையினர் இணைந்து இன்று (ஆக.20) மேற்கொண்டனர். அப்போது பேருந்து ஒன்றில் 4 இளைஞர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சம்பந்தபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேசன், முகமது ரஃபீக், முகமது சமீர் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அப்துல் ஹாதி என்பரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐஐடி மாணவி ...செல்போனை ஆய்வு செய்ய முடிவு

ABOUT THE AUTHOR

...view details