தமிழ்நாடு

tamil nadu

10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி - ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்

By

Published : Nov 5, 2021, 6:46 AM IST

10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி
10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி

வேலூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரியில், தூர்வாராத காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகுந்துள்ளது.

வேலூர்:சதுப்பேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீர் துண்ணீர் நிரம்பியுள்ளது.பாலாற்றிலிருந்து வெள்ள நீர் ஏரிக்கு திருப்பிவிடப்பட்ட நிலையில், ஏரி முழுமையாக நிரம்பி கடைவாசல் கோடி செல்கிறது.

இந்த வெள்ளநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் கொணவட்டம் ரோஜா மசூதி பகுதி ரகீம் சாயிப் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி

இதனால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களை உடனடியாக மீட்டு திருமண மண்டபங்களிலோ அல்லது பள்ளிகளிலோ தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆற்றுப்பாலம் உடைந்து ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: துண்டிக்கப்பட்ட 20 கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details