தமிழ்நாடு

tamil nadu

சொகுசு காரில் வந்து ஆடு திருடும் கும்பல்! பரபரப்பான சிசிடிவி காட்சி

By

Published : Jun 20, 2022, 1:51 PM IST

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் சொகுசு காரில் வந்து மர்ம கும்பல் ஆடு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு காரில் வந்து மர்ம கும்பல் ஆடுகளை திருடிச் செல்லும் கும்பல்
சொகுசு காரில் வந்து மர்ம கும்பல் ஆடுகளை திருடிச் செல்லும் கும்பல்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டு பலர் வாழ்ந்து வருகிறார்கள். விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் லோடு வேன் மற்றும் சொகுசு கார்களில் வரும் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 16-ஆம் தேதி இரவு திருச்செந்தூர் அருகே ஆலந்தலையின் தெரு பகுதியில் சாலை ஓரத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுத்து கிடந்தது.

அந்த நேரத்தில் அங்கு ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரிலிருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேகமாக கீழே இறங்கினார். பின்னர் சாலையோரத்தில் படுத்துக்கிடந்த ஆடுகளில் ஒன்றை திருடி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

ஆட்டைத் திருடிச் செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் காரை விரட்டி செல்கின்றனர். ஆட்டை திருடிச் செல்லும் காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் ஆடு திருடப்படுவது தொடர்கதையாகி உள்ளது

கடந்த ஒரு சில மாதங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை துரிதப்படுத்தி திருட்டு செயல்களில் ஈடுபடும் மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் கஞ்சா ஆர்டர் செய்து விற்பனை - பொறியியல் பட்டதாரி மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details