தமிழ்நாடு

tamil nadu

இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்யும் திமுக! - குற்றச்சாட்டும் ராஜேந்திர பாலாஜி

By

Published : Oct 19, 2019, 5:56 PM IST

திருநெல்வேலி: அறியாமையில் உள்ள இஸ்லாமியர்களை வைத்து திமுக அரசியல் செய்துவருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாங்குநேரி தொகுதியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்கு அதிகளவில் அதிமுகவுக்கு இருப்பதால், அதைத் தடுக்கும் நோக்கத்தில் திமுகவினர் உண்மைக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டினார்.

சிறுபான்மையினருக்கு அதிமுக விரோதமாகச் செயல்படுவதாக திமுக அரசியல் நாடகம் நடத்திவருவதாகவும் ஆனால் திமுக கூட்டணியில் உள்ள ஒரு இஸ்லாமிய கட்சிதான் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் விமர்சித்தார்.

ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கூட்டணி வலுவாக உள்ளதால் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் தங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'சீனி சக்கரை சித்தப்பா, பேப்பரில் எழுதி நக்கப்பா!' - காங்கிரசை பங்கம் செய்த ராஜேந்திர பாலாஜி

Intro:அறியாமையிலுள்ள முஸ்லீம் சகோதரர்களை வைத்து அற்பதனமான அரசியல் செய்து வருகின்றனர். இவர்களின் கட்சியை வளர்பதற்கு நான்தான் கிடைத்தேனா எனது படத்தை செருப்பால் அடிப்பதற்கு நான் என்ன செய்தேன் என்னை அடிக்க அடிக்க நான் எழுந்து வருவேன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி.Body:அறியாமையிலுள்ள முஸ்லீம் சகோதரர்களை வைத்து அற்பதனமான அரசியல் செய்து வருகின்றனர். இவர்களின் கட்சியை வளர்பதற்கு நான்தான் கிடைத்தேனா எனது படத்தை செருப்பால் அடிப்பதற்கு நான் என்ன செய்தேன் என்னை அடிக்க அடிக்க நான் எழுந்து வருவேன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி.


நெல்லை மாவட்டம் களக்காட்டில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார் அவர் கூறுகையில் என்னிடம் வழி சண்டை இழுத்து ஏதாவது பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என திமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஜமாத்தில் இருந்து இரவு 9 மணிக்கு என்னை வந்து பார்த்தது எதற்காக இதை ஜமாஅத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் கேள்வி கேட்க வேண்டும் . இந்த தொகுதியில் அதிமுக விற்கு கிறிஸ்தவர்கள் ஓட்டுகளும் முஸ்லிம்கள் ஓட்டுக்களும் அதிகளவில் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதனை தடுக்கும் நோக்கத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுபான்மையினர் மக்களுக்கு அண்ணா திமுக விரோதமாக செயல்படுகிறது என்பதை என்பதை காட்டுவதற்காக திட்டமிட்டு நடைபெறும் நாடகம் இது ஒரு அரசியல் நாடகம் இதை திமுக அரங்கேற்றி வருகிறது இதனை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சி தான் செயல்பட்டு வருகிறது அதை வெளிப்படையாக பேசக்கூடியவன் காங்கிரஸில் திமுகவின் எங்களது அண்ணா திமுக சரி ஏதாவது பிரச்சினை என்றால் அதனை வெளிப்படையாக பேசுபவன் நான் முஸ்லிம் சகோதரர்கள் என்னிடம் பேசிவிட்டு சாப்பிட்டு விட்டு தான் சென்றார்கள் அதோடு பிரச்சினை முடிவுற்றது ஆனால் அதனை பிஜேபி தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லாததால் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தொண்டர்களை கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் நடிகர் கார்த்திக் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அண்ணா திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது தைரியமாக தேர்தலை எதிர் கொண்டு இருக்கிறோம் மக்கள் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க தயாராகி விட்டார்கள்.
அற்பத்தனமான வெறித்தனமான கோழைத்தனமான அரசியலை திமுக முன்வைத்து வருகிறது ஒவ்வொரு முறையும் மதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்து வரும் திமுகவிற்கு இந்த தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும். ஸ்டாலின் பேசுவது ஆன்மீகம் ஆனால் இடிக்கிறது பிள்ளையார் கோயில் ஓட்டுக்காக பேசுகிறார்கள். என்னை பார்க்க வந்த முஸ்லிம் மக்கள் மிகுந்த அறிவாளிகளும் இல்ல திறமைசாலிகள் இல்லை ஆனால் அவர்களை வைத்து முஸ்லிம் அமைப்புகள் எனக்கு எதிராக அரசியல் செய்து விட்டார்கள் அறியாமையில் இருந்த முஸ்லிம் சகோதரர்கள் வைத்து அரசியல் செய்து உடனே மதுரையில் என் படத்திற்கு செருப்பு மாலை அடிக்கிறார்கள் எந்த பிரச்சினை என்றாலும் ஜமாத் மக்கள் என்னிடம் நேரில் வந்து பேசி இருக்க வேண்டும் ஆனால் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். எனது படத்தை செருப்பால் அடித்து வருகிறார்கள் எதுவாக இருந்தாலும் நேரடியாக வந்து கேட்க வேண்டியதுதானே அப்பன் மகன் உறவை போல் பழகி வருகிறேன் இவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு நான் தான் கிடைத்தேனா. என்னைக் கொண்டு இக்கட்டான சூழ்நிலையில் இழுத்து விடுகிறார்கள் இந்த வேலையை திமுக செய்து வருகிறது
நான் நேதாஜியை தலைவனாக ஏற்றுக் கொண்டவன் நேதாஜியின் வழி வாழ்ந்து வருபவன் அடிக்க அடிக்க நான் எழுந்து வருவேன் நான் எதற்காகவும் பயப்பட போவது கிடையாது அவ்வளவு ஆக்ரோசமாக எனது படத்தை அடிப்பதற்கு நான் என்ன செய்துவிட்டேன் நான் ஒரு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை எனது படத்திற்கு செருப்பால் அடித்து வருகிறார்கள் சமுதாயம் என்பதால் கேட்க ஆளில்லை இது போன்ற செயல்களை திமுக செய்வது வெட்கக்கேடானது கேவலமானது இதுபோன்ற அரசியல் செய்பவர்கள் அழிந்துபோவார்கள் அண்ணா திமுக வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details