தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டை சிறுவன் வழக்கு: சிபிசிஐடிக்கு விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்திற்கு உத்தரவு

By

Published : Aug 10, 2021, 12:22 PM IST

Updated : Aug 10, 2021, 12:35 PM IST

புதுக்கோட்டை சிறுவன் வழக்கு
புதுக்கோட்டை சிறுவன் வழக்கு ()

புதுக்கோட்டை சிறுவன் காணாமல்போன வழக்கில் அவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் ஆகியவை பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்களை ஆதார் ஆணையம் சிபிசிஐடி காவல் துறையினருக்கு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் காணாமல்போன தனது 17 வயது மகனை கண்டுபிடித்துத் தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "நான் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறேன். எனது 17 வயது மகன் சண்முகபிரியன் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறான்.

2019 செப்டம்பரில் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றவன் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்களது வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் தேடியும் எவ்வித பயனும் இல்லை.

இதனையடுத்து நான் கொடுத்த புகாரின்பேரில், புதுக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகனை கோவையில் சிலர் பார்த்ததாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று என் மகனின் புகைப்படத்தைக் காண்பித்து விசாரித்தோம்.

சிறுவனை கண்டுபிடித்துத் தரக் கோரிய வழக்கு: ஆதார் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அங்குள்ள சில உணவகங்களில் சென்று என் மகன் வேலை கேட்டதும், அவர்கள் வேலை தரவில்லை என்பதும் தெரிந்தது. அங்கு பல இடங்களில் தேடியும், எனது மகனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இது குறித்து புதுக்கோட்டை காவல் துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே நீதிமன்றம் தலையிட்டு, எனது மகனை மீட்டுத்தர காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காணாமல்போன சிறுவனின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் ஆகியவை பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்களை ஆதார் ஆணையம் சிபிசிஐடி காவல் துறையினருக்கு வழங்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தாயைத் தேடி பல கி.மீ. பயணம்: 8 வயது சிறுவனின் பாசப் போராட்டம்

Last Updated :Aug 10, 2021, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details