தாம்பரம் அருகே கானத்தூர் காவல் நிலையத்தில் நேற்று (மார்ச் 26) திடீர் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி, “மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களைய காவல் நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். மேலும், சிறப்பாக செயல்பட்டு குற்ற நடவடிக்கைகள் நடவாமல் தடுத்த காவலர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.