தமிழ்நாடு

tamil nadu

தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு தமிழ்நாடு வருகிறாரா பிரதமர்?

By

Published : Oct 11, 2022, 5:24 PM IST

தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு தமிழ்நாடு வருகிறாரா பிரதமர்

ராமநாதபுரத்தில் நட்க்கும் தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக அக்டோபர் 30ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற அக்.30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி அக்.30ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாஜகவின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளதாவும் கூறப்படுகிறது.

பிரதமர் பசும்பொன் வருகை தந்தால் ராமேஸ்வரம் செல்ல வாய்ப்புள்ளது. விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:அதிமுக சார்ந்த முடிவுகளை தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும்; சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details