சென்னை: தண்டையார்பேட்டை ஜி.ஏ. சாலைப் பகுதியில் அமைந்திருக்கும் எஸ்.வி. மோட்டார் பைக் நிறுவனத்தில் வைத்து நரேந்திர மோடியின் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, அதில் கலந்துகொண்ட ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் பொதுமக்களுக்கு இலவச மீன்கள் வழங்கினார்.
11:32 September 17
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்விதமாக தண்டையார்பேட்டையில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ மீன்கள் வீதம் 710 பேருக்கு வழங்கப்பட்டன.
அதன்படி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு கிலோ மீன்கள் வீதம் 710 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பொதுமக்களின் பார்வைக்காக 27 கிலோ எடை கொண்ட மயில் கோலா என்ற மீன் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மீனவர் அணி சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார், அக்கட்சியின் சேவகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில மீனவர் அணிச் செயலாளர் தேவி சசிகுமார் செய்திருந்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி 71 - மெகா திட்டங்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் பாஜக