தமிழ்நாடு

tamil nadu

அரும்பாக்கம் வங்கி கொள்ளையர்களில் 6 பேர் மீது குண்டாஸ்

By

Published : Sep 22, 2022, 5:19 PM IST

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 6 முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னைஅரும்பாக்கம் வங்கிக்கொள்ளை வழக்கில் முக்கியப்பங்கு வகித்த 6 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் இன்று (செப்.22) உத்தரவிட்டுள்ளார்.

அரும்பாக்கம் தனியார் கோல்டு லோன் நிறுவனத்தில் கடந்த 13ஆம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதைத்தொடர்ந்து, போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் இறுதியாக அந்நிறுவன ஊழியர் முருகன், அவனது நண்பன் சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில் குமரன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், கேப்ரியல் மற்றும் இவர்களுடன் இணைந்து நகைகளை விற்க உதவிய கோவையைச்சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மருமகன் ஸ்ரீவத்சன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். தவிர, கொள்ளைபோன 31.7 கிலோ தங்க நகைகளும் போலீசாரால் மீட்கப்பட்டன.

தொடர்ந்து இவ்வழக்கில் சிறையில் உள்ள 8 பேரில், கொள்ளையில் முக்கியப்பங்கு வகித்த 6 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் இன்று (செப்.22) உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, இதில் மூளையாக செயல்பட்ட முருகன், உடந்தையாக இருந்த சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில் குமரன் மற்றும் நகைகளை உருக்கி விற்பனை செய்ய உதவிய ஸ்ரீவத்சன் ஆகிய 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு பிணையில் வெளியே வரமுடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொள்ளையடிக்கப்பட்ட அரும்பாக்கம் வங்கி நகைகள் உருக்கப்பட்டதா.. போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details