தமிழ்நாடு

tamil nadu

காதல் திருமணம் செய்துகொண்ட மகளை கொல்ல முயன்ற தாய்: நடவடிக்கை எடுக்க உத்தரவு

By

Published : Dec 6, 2021, 4:08 PM IST

ஜாதி மறுப்பு திருமணம்

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தன்னை ஆணவக்கொலை செய்ய முயற்சித்த தனது தாய் (ஊராட்சி மன்றத் தலைவி) மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அரசு எட்டு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை: சென்னை சேர்ந்த கயல்விழி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தர். அந்த மனுவில், "தற்பொழுது ராமநாதபுரம் மாவட்ட கமுதி ஒன்றியம் சடையனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ள மல்லிகா மலைச்சாமி மகள் நான்.

நான் கல்லூரியில் பி.இ. படித்துவந்தேன். அப்பொழுது நான் மாற்று சமூகத்தைச் சேர்ந்த (பட்டியலினத்தைச் சேர்ந்த) செல்வகுமார் என்பவரைக் காதலித்து திருமணம் செய்ய முடிவுசெய்தேன்.

ஆணவக்கொலை செய்வதற்காக முயற்சி

இது குறித்த தகவல் தெரிந்தவுடன் என்னுடைய உறவினர்கள் குறிப்பாக எனது அம்மா மல்லிகா மலைச்சாமி, தாய்மாமா தலைமையிலான உறவினர்கள் என்னை ஆணவக்கொலை செய்வதற்காக முயற்சி செய்தனர்.

இந்த நிலையில், நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டோம். இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்தவர் எனது அம்மா, முனியசாமி அவருடைய கட்சி அதிகார பலத்தைக் கொண்டு எங்களை மிரட்டிவருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதி சாதி, மத ரீதியான பாகுபாடு பார்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் என் மீது பாகுபாடு கொண்டு என்னைப் பலவகைகளில் தொந்தரவு செய்துவருகின்றனர். தேர்தல் ஆணைய விதிமுறையைப் பின்பற்றாத எனது அம்மா வேட்புமனு தாக்கலின்போது தவறான தகவலையும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளையும் சேர்த்துள்ளார்.

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

எனவே, இவரது ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தேன். அந்த, மனு குறித்து மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் இன்று (டிசம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் மனுதாரர் கோரிக்கை குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் மனுதாரரின் தாயார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரரின் தாயார் ஊராட்சி மன்றத் தலைவி மீது மனுதாரர் கொடுத்த புகாரின் மீது எட்டு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:அரசுப்பள்ளியில் திடீர் ஆய்வுமேற்கொண்ட அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details