தமிழ்நாடு

tamil nadu

சட்ட விதிகளின்படி அதிமுக அமைப்பு தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம்

By

Published : Dec 7, 2021, 3:39 PM IST

பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக அமைப்பு தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெற்று வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, “அதிமுக அமைப்பு தேர்தல் சட்டப்படி நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தர்மத்தின் படி நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெறும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி

நீதிமன்றம் ஏதேனும் தீர்ப்பு கொடுத்தால் அதிமுக எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்ற தீர்ப்பை தான் மதிப்பவன் என்று தெரிவித்தார். அதிமுக உறுப்பினர் அட்டைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கத் தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

இதையும் படிங்க:ரூ.1000 கோடி வருவாயை மறைத்த சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம்

ABOUT THE AUTHOR

...view details