தமிழ்நாடு

tamil nadu

அந்தரங்க பேச்சை ஒட்டுக் கேட்கும் கூகுள்!

By

Published : Jul 14, 2019, 7:01 PM IST

Updated : Jul 15, 2019, 2:40 AM IST

ஸ்மார்ட் போன்களில் உபயோகிக்கும் கூகுள் அசிஸ்டன்ட்(Google Assistant) வசதியின் மூலம் நாம் பேசும் அந்தரங்க தகவல்கள் கசிந்ததைக் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட்

உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு அப்பாற்பட்ட செயலையும் மிகவும் எளிதாக, அதிவிரைவில் தொழில்நுட்பம் முடித்து விடுகின்றன. ஆனால் அவை மனிதர்களுக்கு சில சமயங்களில் எமனாகவும் மாறும் தன்மை உடையது.

ஸ்மார்ட் போன்களில் நாம் "ஓகே கூகுள்" என்று அழைத்தால் போதும். நமக்கு உதவி செய்யக் கூகுள் அசிஸ்டன்ட் கண்முன்னே வந்து நிற்கும். அதனிடம் நாம் பார்க்க விரும்பியதைக் கூறினால் போதும் அதிவிரைவில் கண்டுபிடித்துத் தரும். இதனால் கூகுள் அசிஸ்டன்ட் வசதியை அதிகளவில் மக்கள் உபயோகித்து வருகின்றனர். மேலும் கூகுள் ஹோம், ஸ்மார்ட் ஸ்பீக்கர் என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்கள் நம்மை உட்கார்ந்த இடத்திலே வேலையை முடிக்க உபயோகமாக இருக்கிறது.

கூகுள் ஹோம் அசிஸ்டன்ட் சேவை

இந்நிலையில் ஃப்ளாண்டர் செய்தி அளித்த தகவல்படி, கூகுள் அசிஸ்டன்ட் வசதி "ஓகே கூகுள்" என்று சொல்லாமலே நாம் பேசும் அனைத்தையும் கூகுள் வசதியை மேம்படுத்த, அதன் ஊழியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவித்தது. மேலும் அதிர்ச்சி செய்தியாக, பயனாளர்கள் பேசிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்தத்தரக தகவல் கசிந்ததுள்ளது எனத் தெரிகிறது. இதனையடுத்து வீடுகளில் பயன்படுத்தும் கூகுள் ஹோம், ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற சாதனங்களும் நாம் பேசும் அனைத்தையும் சேமித்து வைப்பதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கேட்டபோது கூகுள் நிறுவனமும் தகவல் கசிந்ததை ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் சரிசெய்யப்படும் எனவும் கூகுள் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 14.07.19

சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனையை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்துவைத்து உரையாற்றினார்...

சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,
தமிழகம் சுகாதாரத்துறை யில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மருத்துவர்கள் நன்றாக பணியாற்றுகிறார்கள். பல்வேறு நாட்டினரும் இங்கு மருத்துவத்திற்கு வந்துசெல்லும் நிலை உள்ளது. தமிழக மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சென்று சாமானிய மக்களுக்கு உதவிட வேண்டும். தமிழகம் மருத்துவத்திற்கு மட்டுமின்றி சினிமாவிலும் சிறந்து விளங்குகிறது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு நடிகையாக இருந்தவர், அதேபோல் சினிமாவில் எழுத்தாளராக இருந்தவர். தற்போது ரஜினி, கமல் என சினிமா துறையில் உள்ளவர்கள் சாதிக்கிறார்கள்.

தற்போது நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை என்பதால் அரசியல் பேசமுடியாது.. ஆயுஸ்மான் பாரத் உள்ளிட்ட பிரதமரின் பல்வேறு திட்டங்களால் உலக நாடுகள் இந்தியாவை திறும்பிப்பார்க்கிறது.
மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சென்று சமூக ரீதியிலான நோய்கள் வராமல் தடுப்பது பற்றி ஏழைகளுக்கு போதிக்க வேண்டும்.. சமூக ஊடங்களை பார்துக்கொண்டு பிள்ளைகளை கூட கவணிக்காத நிலை இன்று நீடிப்பது வருத்தமளிக்கிறது.
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தண்ணீர் தேக்கங்களை சீர் செய்ய வேண்டும் என்றார்..

Conclusion:null
Last Updated :Jul 15, 2019, 2:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details