தமிழ்நாடு

tamil nadu

10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தால் காப்பீடு அவசியம் - நிதியமைச்சகம்

By

Published : May 15, 2020, 4:31 PM IST

டெல்லி: கரோனா பாதிப்பு காலத்தில் தொழிலாளர்களை பாதுகாக்க பணியாளர்கள் காப்பீடு திட்டத்தில் நிதியமைச்சகம் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

ESIC
ESIC

நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.

குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் தற்போது எழுந்துள்ளது. இதையடுத்து, தொழிலாளர்கள் காப்பீட்டு சட்டத்தில் மாற்றத்தை மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, 10 அல்லது 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் இ.எஸ்.ஐ.சி. எனப்படும் மாநில பணியாளர்கள் காப்பீடு கழகத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் காப்பீட்டை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டங்களுக்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details