2021-22 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. கோவிட்-19 தாக்கத்திற்குப் பின்னர் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டையை பல்வேறு தரப்பினரும் அதீத எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குறிப்பாக, கரோனாவால் கடும் பாதிப்பைச் சந்தித்த தொழில்துறைக்கு பல சலுகைகள் வழங்கப்படும் நிலையில் பொது மக்களுக்கும், வரி செலுத்துவோருக்கும், சம்பளம் பெறும் தனிநபர்களுக்கும் வரி சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
விக்ரம் விஜயராகவன், மெட்ராஸ் வர்த்தக சபை
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய மெட்ராஸ் வர்த்தக சபையின் வரித்துறை இணைத் தலைவர் விக்ரம் விஜயராகவன், "வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் கையில் அதிக பணம் தங்கும், சந்தையில் நுகர்வு அதிகரிக்கும்.
நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் அரசு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும். உதாரணமாக கார் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வரி விலக்கு அளிக்காலம். அந்த வகையில், தனி நபர்கள், தொழில்துறை, அதனை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.