தமிழ்நாடு

tamil nadu

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள்: அதிரடியாக கைதுசெய்த காவலர்கள்!

By

Published : Jun 10, 2020, 3:59 PM IST

திருவண்ணாமலை: செங்கம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த நபரையும், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இருசக்கர வாகனத்தை திருடிய நபர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக செங்கம் காவல் ஆய்வாளர் சாலமன்ராஜாவிடம் வாகனங்களை பறிகொடுத்தவர்கள் புகார் கொடுத்திருந்தனர்

புகாரின் அடிப்படையில் செங்கம் காவல் துறையினர் மில்லத் நகர் அருகே உள்ள குப்பநத்தம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நபரிடம் இருசக்கர வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டு விசாரித்தனர்

அப்போது அந்த நபர் ஆவணங்களை கான்பிக்காததால் சந்தேகமடைந்த காவல் ஆய்வாளர் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், அந்த நபர் ஓட்டி வந்த வாகனம் திருடப்பட்ட வாகனம் என்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்

இதனைத் தொடர்ந்து அவரை விசாரித்தபோது புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்தீஸ்வரன் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு புதுச்சேரி சிறையில் ஓராண்டு இருந்து வந்ததும் தெரியவந்தது .

இதனையடுத்து கீர்த்தீஸ்வரனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேலும் மூன்று இருசக்கர வாகனங்கள் இருப்பதாக அந்த நபர் ஒத்துக்கொண்டார். இதனைதொடர்ந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த செங்கம் காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே போன்று செங்கம் அடுத்த கடலாடி காவல் நிலையத்திற்கு உள்பட்ட காஞ்சி காமராஜர் நகரில் தனியார் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்ற சின்ன கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வேலையை முடித்துவிட்டு அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அவரை வழிமறித்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் மணிவர்மா, சிலம்பரசன், மணிகண்டன் ஆகியோர் சிலம்பரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போன் , பணம் ஆகியவை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக சிலம்பரசன் கடலாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் அவர்களை தேடி வந்த கடலாடி காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் வழிப்பறி கொள்ளையர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

பின்பு அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி அவரகளை சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details