தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 61லிருந்து 90 ஆக அதிகரிப்பு!

By

Published : Jun 24, 2020, 1:38 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 61 லிருந்து 90 ஆக அதிகரித்துள்ளது.

containment zone in chennai increased rapidly
containment zone in chennai increased rapidly

தமிழ்நாட்டில் சென்னை மற்றம் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கரோனா வைரஸூன் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் நோய்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னை முழுவதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பரவலை கட்டுப்படுத்த, தொற்று அதிகம் உள்ள பகுதியை தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது. மாநகராட்சியில் தொற்றின் பரவல் தீவிரம் அடைந்துவருவதால், 61 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 90 ஆக உயர்ந்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதனைக் காணலாம்.

எண் மண்டலங்கள் க.பகுதிகள்
01 தண்டையார்பேட்டை 38
02 கோடம்பாக்கம் 17
03 வளசரவாக்கம் 09
04 அண்ணாநகர் 08
05 தேனாம்பேட்டை 08
06 சோழிங்கநல்லூர் 04
07 திருவிக நகர் 03
08 அம்பத்தூர் 02
09 அடையாறு 01

மாநகராட்சி அறிவித்துள்ள இந்தக் கட்டுப்பாடு பகுதிகளில் 14 நாள்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லையெனில் அந்தப் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் பட்டியிலில் இருந்து நீக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: 'பள்ளிகள் திறக்கப்படும்போது சுழற்சி முறையில் வகுப்புகள்; குழு பரிந்துரையின்படி முடிவு'

ABOUT THE AUTHOR

...view details