தமிழ்நாடு

tamil nadu

5 வயதில் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் ; 31 ஆண்டுகளுக்கு பின் ஓர் பெண் புகார்

By

Published : Sep 21, 2022, 6:48 PM IST

Updated : Sep 22, 2022, 9:14 AM IST

5 வயதில் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் ; 31 ஆண்டுகளுக்கு பின் ஓர் பெண் புகார்

5 வயதில்,தன்னைபாலியல் வன்கொடுமை செய்த தன் அண்ணன் மீது 31 ஆண்டுகள் கழித்து காவல்துறையில் புகார் அளித்த பெண்மணி.

டெல்லி:31 வருடங்களுக்கு முன்பு தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக ஓர் 44 வயது பெண் காவல்துறையில் புகார் அளித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஐந்து வயது இருக்கும் போது, தன் அண்ணனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அப்போது இவர் தன் குடும்பத்தாரிடம் சொன்ன போது, தங்கள் குடும்பத்தின் பெயருக்கு அவமானம் வந்துவிடுமென இதை வெளியில் சொல்லாமல் தடுத்துள்ளனர். ஆனால், தற்போது 31 வருடங்கள் கழித்து தற்போது இந்தப் பெண்மணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவர் தற்போது தன் கணவன் மற்றும் மகனுடன் நொய்டாவில் வசித்து வருகிறார். இவர் தனது ஐந்து வயதில் தன் இளைய அண்ணனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இந்த வன்கொடுமை பல வருடங்கள் தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் 1983 முதல் 1991 வரையான காலகட்டங்களில் நடந்தேறியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலம், ராஜ்பேட் காவல்துறையினர் நேற்று(செப்.20) இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரை பாலியல் வன்கொடுமை செய்த இவரது அண்ணன் தற்போது முன்பையிலுள்ள மலாத் பகுதியில் வசித்து வருகிறார்.

இது குறித்து அந்த பாதிக்கப்பட்ட பெண்மணி தேசிய மகளிர் ஆணையத்துடன் சேர்ந்து புகார் அளித்துள்ளார். இந்தப் பெண்மணி ஏறத்தாழ 8 ஆண்டுகளாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாக 31 வருடங்களுக்கு பிறகு தனது ஆறா வடுகளை ஆற்ற நீதி தேடி வந்துள்ளார் அப்பெண்மணி.

இதையும் படிங்க: பிகாரில் கண்டெடுக்கப்பட்ட நான்கு கண்களுடன் கூடிய அரியவகை மீன்!

Last Updated :Sep 22, 2022, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details