தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டது - பன்வாரிலால் புரோகித்

By

Published : Oct 22, 2022, 9:49 AM IST

Updated : Oct 22, 2022, 12:16 PM IST

தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர் பதவிகள் ரூ.40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

Etv Bharatதமிழ்நாடு பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி   லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது - பஞ்சாப் ஆளுநர் குற்றச்சாட்டு
Etv Bharatதமிழ்நாடு பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது - பஞ்சாப் ஆளுநர் குற்றச்சாட்டு

சண்டிகர்(பஞ்சாப்): பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டில் பல்கலைக் கழக துணை வேந்தர் பதவிகள் 40- 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சத்பீர் சிங் கோசல் "சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று குற்றம்சாட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனடியாக அவரை நீக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்னுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதுதொடர்பாக நேற்று (அக் 21) செய்தியாளர்களை சந்தித்த புரோகித், ‘துணைவேந்தர்கள் நியமனத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது. நான் 4 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தேன். அப்போது அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை இருந்தது. அந்த மாநிலத்தில் துணைவேந்தர் பதவிகள் ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டது.

இருப்பினும் நான் ஆளுநராக சட்டப்படி 27 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்தேன். வேலை எப்படி நடக்கிறது என்பதை பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் திறமையானவர், திறமையற்றவர் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால், கல்வி மேம்படுவதே எனது நோக்கம். அதனால் சட்டவிரோதமாக நியமனங்கள் நடப்பதை அனுமதிக்கமாட்டேன் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தெலங்கானாவில் பாலியல் வழக்கில் சிக்கிய பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து

Last Updated : Oct 22, 2022, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details