ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொல்லட்டப்பட்டனர். இந்த சம்பவம் நேற்றிரவு 7.45 மணியளவில் நடந்துள்ளது. பாலகோட் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்ட ராணுவ வீரர்கள் அந்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பின் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லட்டப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி), வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களது பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது. ரஜோரியின் தாங்ரி கிராமத்தில் ஜனவரி 1ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் ஜனவரி 2ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் வீட்டில் ஐஇடி வெடுகுண்டு வெடித்து சிதறியது.