ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சவாய்மாதோபூரில் உள்ள சூர்வால் கிராமத்தில் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி தகாதேவி என்பவரது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது கொள்ளையர்கள் தகாதேவியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மார்ச் 14ஆம் தேதி சவாய்மாதோபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சூர்வால் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது சில போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். அதோடு போலீசார் வாகனத்தை தீயிட்டுக்கொழுத்தினர். அப்போது வாகனத்தில் இருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பூல் முகமதுஉடல்கருகி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அப்போது 89 பேர் குற்றவாளிகளாக போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.